‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளாடைப் போராட்டம் !

‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ எனக் கூறி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக உள்ளாடைப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹொரா கோ கம’ அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ என்ற கோஷங்களோடும் பதாதைகளோடும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த பகுதியில் ஆண்கள், பெண்களது உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.